ப்1ரயத்1னாத்3யத1மானஸ்து1 யோகீ3 ஸந்ஶுத்3த4கி1ல்பி3ஷ: |
அனேக1ஜன்மஸந்ஸித்3த4ஸ்த1தோ1 யாதி1 ப1ராம் க3தி1ம் ||45||
ப்ரயத்னாத்—--மிகுந்த முயற்சியுடன்; யதமானஹ---—முயற்சி; து—--மற்றும்; யோகி—--ஒரு யோகி; ஸந்ஶுத்த—--புனிதப்படுத்தப்பட்டட; கில்பிஷஹ---—பொருள் ஆசைகளிலிருந்து;அநேக—----பற்பல; ஜன்ம—---பிறப்புகள்; ஸந்ஸித்தஹ---—மாசற்ற நிலை அடைந்து; ததஹ--—பின்னர்; யாதி—--பெறுகிறார்; பராம்—--உயர்ந்த; கதிம்—--பாதை
BG 6.45: பல கடந்த பிறவிகளின் திரண்ட புண்ணியங்களோடு, மேலும் முன்னேறுவதற்கான நேர்மையான முயற்சிகளில் இந்த யோகிகள் ஈடுபடும் போது, அவர்கள் பொருள் ஆசைகளிலிருந்து தூய்மையடைந்து, இந்த வாழ்க்கையிலேயே முழுமையை அடைகிறார்கள்.
ப்1ரயத்1னாத்3யத1மானஸ்து1 யோகீ3 ஸந்ஶுத்3த4கி1ல்பி3ஷ: |
அனேக1ஜன்மஸந்ஸித்3த4ஸ்த1தோ1 யாதி1 ப1ராம் க3தி1ம் ||45||
பல கடந்த பிறவிகளின் திரண்ட புண்ணியங்களோடு, மேலும் முன்னேறுவதற்கான நேர்மையான முயற்சிகளில் இந்த யோகிகள் ஈடுபடும் போது, அவர்கள் பொருள் ஆசைகளிலிருந்து தூய்மையடைந்து, இந்த வாழ்க்கையிலேயே முழுமையை …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
பல கடந்தகால வாழ்க்கையின் திரட்டப்பட்ட பயிற்சி ஆன்மீக முன்னேற்றத்திற்கு உந்தும் தென்றல் காற்றாக மாறுகிறது. இந்தத் தென்றலில், கடந்த கால வாழ்க்கையைத் தொடரும் யோகிகள், தற்போதைய வாழ்க்கையில் நேர்மையான முயற்சியின் வடிவத்தில் தங்கள் பயணத்தை உயர்த்துகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் ப்1ரயத்1`னாத்4 யத1மானஸ்து1 'என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், அதாவது 'முன்பை விட கடினமாக முயற்சிப்பது.’ து என்ற வார்த்தை, அவர்கள் பயணத்தை முடிக்க முடியாமல் போன முந்தைய வாழ்நாளைக் காட்டிலும் அவர்களின் தற்போதைய முயற்சிகள் ஆழமானவை என்பதைக் குறிக்கிறது. இதனால் அவர்கள் கடந்த காலத்திலிருந்து முன்னோக்கி கொண்டு செல்லப்பட்ட வேகத்தை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது மற்றும் சாதகமான காற்று அவர்களை இலக்கை நோக்கி முன்னேற அனுமதிக்கிறது. பார்ப்பவர்களுக்கு, அவர்கள் நிகழ்கால வாழ்க்கையில் முழு தூரத்தையும் கடந்து சென்றதாகத் தோன்றலாம், ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: அனேக ஜென்ம ஸன்ஸித்தஹ ‘யோகத்தில் முழுமை என்பது பல வாழ்நாட்களின் திரட்டப்பட்ட பயிற்சியின் விளைவாகும்.‘